/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு
/
அ.தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு
ADDED : ஏப் 06, 2024 03:53 AM
மதுரை : மதுரை பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. நகர் செயலாளர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார். மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார். பா.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், தே.மு.தி.க., பொறுப்பாளர் மாணிக்கவாசகம், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செல்லுார் ராஜூ பேசுகையில், ''வரும் தேர்தல் ஒரு குருஷேத்திரப் போர். அன்று பாண்டவர்களின் பக்கம், நியாயத்தின் பக்கம் கிருஷ்ணர்இருந்தார். இன்று அ.தி.மு.க., பக்கம் கிருஷ்ணராக மக்கள் இருக்கிறார்கள். பொதுச்செயலர் பழனிசாமி தருமராக இருந்து வழிநடத்துகிறார். இது உண்மைக்கும் பொய்க்கும் இடையில் நடக்கும் தேர்தல்'' என்றார்.

