ADDED : ஏப் 30, 2024 05:20 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் டிச.16ல் மார்கழி பாவை விழாவையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் 7 ஆயிரத்து 108 திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. இதுகுறித்து 2வது ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
ஆலோசகர் நாகரத்தினம் தலைமை வகித்தார். இசைப்பள்ளி நிறுவனர் விசாலாட்சி, ஆலோசகர்கள் அய்யம்பெருமாள், சபரிமலையான், அருப்புக்கோட்டை, சிவகங்கை, காரியாபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆலோசகர்கள் பங்கேற்றனர்.
