sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உபரி ஆசிரியர்கள் பணிநிரவலை தவிர்க்க உதவிபெறும் பள்ளிகள் வலியுறுத்தல்

/

உபரி ஆசிரியர்கள் பணிநிரவலை தவிர்க்க உதவிபெறும் பள்ளிகள் வலியுறுத்தல்

உபரி ஆசிரியர்கள் பணிநிரவலை தவிர்க்க உதவிபெறும் பள்ளிகள் வலியுறுத்தல்

உபரி ஆசிரியர்கள் பணிநிரவலை தவிர்க்க உதவிபெறும் பள்ளிகள் வலியுறுத்தல்


ADDED : மே 18, 2024 04:11 AM

Google News

ADDED : மே 18, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'உபரி ஆசிரியர்களின் பணிநிரவலை தவிர்க்க 'எமிஸ்' பதிவேற்றம் அடிப்படையில் ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும்' என தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் அமல்ராஜன், பொது செயலாளர் கனகராஜ் கூறியதாவது:

கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவுகளில் உதவி பெறும் பள்ளிகளுக்கு சில சாதகமான நடவடிக்கைகள் இருந்தாலும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. 'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது' என பல நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவ்வகை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் நியமனங்களுக்கு டி.இ.டி., தேர்ச்சி அவசியம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது முரண்பாடாக உள்ளது. இது மேலும் பல வழக்குகள் தொடர வழிவகை செய்யும்.

அந்த இயக்குநர் உத்தரவில் '2019, ஏப்.,9 க்கு முன் நடந்த நியமனங்களுக்கு மட்டும் ஒப்புதல் வழங்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவில் இதுபோன்ற நிபந்தனை இடம் பெறவில்லை. நீதிமன்ற வழக்குகளை தவிர்க்கும் வகையில் இயக்குநர்களின் இந்த முரண்பாடுகளை சரிசெய்து, தகுதியான அனைத்து நியமனங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு அளித்துள்ளது. அதுபோல் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5 சதவீதம் வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. இக்கல்வியாண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளில் கட்டணமில்லா ஆங்கில வழிக் கல்வி அளிப்பது போல் உதவிபெறும் பள்ளிகளிலும் கொண்டுவர வேண்டும். மேலும் 'எமிஸ்' பதிவு அடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிட்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதை நிலையில், எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் புதிய பணியிடங்களை கோருவதில்லை. மாணவர்கள் நலன் கருதி பணிநிரவல் நடவடிக்கைகளுக்காக மட்டும் தமிழ் வழி, ஆங்கில வழி இணைப் பிரிவு மாணவர்களை கணக்கிட்டு பணியிட நிர்ணயம் மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டத்திருத்தம் விதிப்படி 13.01.2023க்கு முன் ஏற்பட்ட தகுதியான காலிப்பணியிடங்களில் நியமனம் பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளித்து நியமன ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us