sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.6 கோடி சொத்து வரி வருவாய் அதிகரிப்பு கை மேல் பலன்

/

ரூ.6 கோடி சொத்து வரி வருவாய் அதிகரிப்பு கை மேல் பலன்

ரூ.6 கோடி சொத்து வரி வருவாய் அதிகரிப்பு கை மேல் பலன்

ரூ.6 கோடி சொத்து வரி வருவாய் அதிகரிப்பு கை மேல் பலன்


ADDED : ஜூலை 09, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் புதிய கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்துவரி வசூலிப்பில் அதிகாரிகள் 'கறார்' காட்டியதால் கைமேல் பலன் அளிக்கும் வகையில் மூன்று மாதங்களில் சொத்துவரி வருவாய் ரூ.6 கோடி அதிகரித்துள்ளது.

மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாய் இனமாகும். புதிய கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட இவ்வரியை வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.

விண்ணப்பம் செய்தும் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்யாமல் இருந்ததும் தெரியவந்தது.

சில கட்டடங்களில் சதுர அடிகளை மறைத்தும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுகுறித்த தகவல் கமிஷனர் தினேஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'புதிய கட்டடங்களுக்கு 30 நாட்களில் வரி நிர்ணயம் செய்து வசூலிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்' என உதவி வருவாய் அலுவலர், பில் கலெக்டர்களுக்கு கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஏப்ரல் முதல் தற்போது வரை வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டதால் மாநகராட்சியின் ஆண்டு சொத்து வருவாய் மூன்று மாதங்களில் ரூ.6 கோடியாக அதிகரித்துள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில் ''100 வார்டுகளில் ஏப்ரல் முதல் தற்போது வரை புதிதாக சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து 11,479 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 18 விண்ணப்பம் மட்டுமே நிலுவையில் உள்ளன. பிற அனைத்திற்கும் தீர்வுகண்டு சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

'புதிய கட்டடங்களுக்கு 30 நாட்களுக்குள் வரிநிர்ணயம் செய்ய வேண்டும்' என்ற கெடு காரணமாக மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வரை நிரந்தர வருவாய் அதிகரித்துள்ளது'' என்றார்.






      Dinamalar
      Follow us