/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமரின் கிசான் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
பிரதமரின் கிசான் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 08, 2024 04:44 AM
மதுரை, : பிரதமரின் கிசான் தொகைக்கான 17 வது தவணைத்தொகை விடுவிப்பதற்கான பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை துணை இயக்குநர் அமுதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஆண்டுக்கு 3 முறை ரூ.2000 வீதம் இதுவரை 16 தவணைகளாக விவசாயிகளுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2800 விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகளுக்கு இந்த பிரச்னை தெரியாமல் பணம் வரவு வைக்கவில்லை என புகார் செய்கின்றனர். தகுதியான நிலமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். வங்கிக்கணக்கில் பணம் வரவாக வில்லை என்றால் இ சேவை மையம் மூலம் வங்கியின் 'இ.கே.ஒய்.சி.' விவரங்களை பதிவு செய்ய வேண்டும். சிலருக்கு ஆதார் கார்டில் பெயர், எழுத்துப்பிழையுடன் இருக்கலாம். ஆதார் எண் சரியாக இருந்தால் வங்கிக்கணக்குடன் பதிவு செய்ய முடியும். 17 வது தவணைத்தொகை ஜூனில் வழங்க உள்ளதால் அதற்குள் விவரங்களை இணைக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், டாக்டர், வழக்கறிஞர் போன்ற தொழில்துறை நிபுணர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், ஒரே குடும்பத்தில் 2 பேர் விண்ணப்பித்தாலும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை கிடைக்காது. ஏற்கனவே தவணைத்தொகை வாங்கி விடுபட்டவர்கள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

