ADDED : ஆக 31, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : செக்கானுாரணி அருகே புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மகன் பாலமுருகனுடன் இடத்தகராறு இருந்தது.
2011ல் கண்ணனை, பாலமுருகன் கத்தியால் குத்தினார். இவ்வழக்கின் விசாரணை உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ரஷ்கின்ராஜ் முன்னிலையில் நடந்தது.
அரசு வழக்கறிஞர் ராஜசேகர் ஆஜரானார். பாலமுருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.