ADDED : ஆக 26, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி திருமங்கலத்தில் நேற்று நடந்தது.
கூத்தியார்குண்டு பஸ் ஸ்டாப்பில் இருந்து திருமங்கலம் தெற்கு தெரு காந்தி சிலை வரை 8 கி.மீ., துாரம் போட்டி நடந்தது. அ.ம.மு.க., தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
மாநில நிர்வாகி ஜீவிதா நாச்சியார் முன்னிலை வகித்தார். 5 வயது முதல் 50 வயது வரை 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கலந்து கொண்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

