ADDED : ஆக 07, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் சுருளி.
இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கம்பம் அங்கூர்பாளையம் ரோடு அருகே உத்தப்புரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: அங்கு டாஸ்மாக் கடை துவங்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.