ADDED : ஆக 18, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : அலங்காநல்லுார் ஒன்றியம் அ.கோவில்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
மக்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை துறை அலுவலர்கள் பெற்றனர். தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் நித்யா வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சாமிநாதன், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட துணை அமைப்பாளர் விஜி, அணி நிர்வாகிகள் தவசதீஷ், சந்தனகருப்பு, பிரதாப், ராகுல், ரியாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்

