ADDED : ஜூன் 28, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சந்திராபாளையம் பகுதி கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தாழ்வான வீட்டு வாசல்களில் கழிவு நீர் நின்றது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்பின. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதி கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டன.