sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மக்களுடன் முதல்வர் முகாம்; ஊராட்சிக்கு ரூ.35 ஆயிரம் வசூல்

/

மக்களுடன் முதல்வர் முகாம்; ஊராட்சிக்கு ரூ.35 ஆயிரம் வசூல்

மக்களுடன் முதல்வர் முகாம்; ஊராட்சிக்கு ரூ.35 ஆயிரம் வசூல்

மக்களுடன் முதல்வர் முகாம்; ஊராட்சிக்கு ரூ.35 ஆயிரம் வசூல்


ADDED : ஆக 13, 2024 06:15 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்த ஊராட்சிக்கு தலா ரூ.35 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்யும் ஒன்றிய அலுவலர்களால் ஊராட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.

இத்தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியத்தில் 23ம், அலங்காநல்லுாரில் 37ம், மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சில ஊராட்சிகளும் உள்ளன. ஜூலையில் இருந்து மக்களுடன் முதல்வர் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில்5 முதல் 6, 8 ஊராட்சிகளை ஒன்றிணைத்து கிராம மக்களிடம் 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மனுக்கள் வாங்குகின்றனர்.

முகாமிற்கான பந்தல்,இணையதள வசதி, டீ, ஸ்நாக்ஸ், அலுவலர்களுக்கு சைவ, அசைவ மதிய உணவு என ஊராட்சிக்கு தலா ரூ.35 ஆயிரம் வசூலிக்கின்றனர். கூட்டத்தை காட்ட கிராமங்களில் இருந்து ஆட்களை ஆட்டோவில் அழைத்து வரும் செலவு தனி என புலம்புகின்றனர்.

ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:

முகாமிற்கு என அரசு தொகை நிதி ஒதுக்குகிறதா என தெரியவில்லை. செலவு தொகையை விட கூடுதலாக வாங்குகின்றனர். ரூ.20 ஆயிரம் வழங்கினால், முகாம் முடிந்தாலும் மீதம் ரூ.15 ஆயிரத்தை ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் தொடர்ந்து கேட்கின்றனர்.

ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிதி, சம்பளபணமே ஊராட்சி கணக்கில் வரவில்லை. இந்நிலையில் சொந்த பணத்தை தந்துள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us