நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நாள் விழா செயலாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் தேவி பூமா வரவேற்றார். முதல்வர் ராமசுப்பையா ஆண்டறிக்கை வாசித்தார். டான்ஜெட்கோ நிதி கட்டுப்பாட்டாளர் காசி அறிமுக உரையாற்றினார். மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறந்த மாணவர்களாக கனகராஜ், சோபிகா தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்கள் அஜய்பிரசாத்குமார், சாய்பிரதீபாவுக்கு விருது வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர்கள் மல்லிகா, திருஞானசம்பந்தம் தொகுத்து வழங்கினர். தமிழ்த்துறை தலைவர் காயத்ரி தேவி நன்றி கூறினார்.

