/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு
/
ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு
ADDED : மார் 04, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தவிட்டுச்சந்தையைச் சேர்ந்த சரவணக்குமார் 56, ஆட்டோ ஒன்றில் தெப்பக்குளம் சென்ற போது 15 பவுன் நகை, அலைபேசி அடங்கிய பையை தவற விட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
சிறிது துாரம் சென்றபின்ஆட்டோவில் கைப்பை இருப்பதைப் பார்த்த கோச்சடையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் 52, சரவணக்குமாரை இறக்கிவிட்டப் பகுதி போலீஸ் ஸ்டேஷன் சென்று பையை ஒப்படைத்தார்.
அங்கு பொருட்கள் சரிபார்க்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டிய கமிஷனர் லோகநாதன், ரூ. ஆயிரம் வழங்கினார்.

