ADDED : மே 04, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகா அத்திபட்டி முருகன் 31, கட்டடத் தொழிலாளி. குடிப்பட்டி விலக்கு அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணி நடக்கிறது.
நேற்று அங்கு வேலைக்குச் சென்ற முருகன், தொட்டி கட்டுவதற்காக சென்ட்ரிங் கம்பி கட்டிக் கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்து இறந்தார்.
