sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

/

நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

நடிகை நமீதாவிடம் மதச்சான்று கேட்டதாக சர்ச்சை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் மீது புகார்

11


ADDED : ஆக 27, 2024 01:54 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:54 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை நமீதாவிடம் மதச் சான்று கேட்டதாக கோயில் ஊழியர்கள் மீது புகார் எழுந்தது. 'மனவருத்தத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நமீதா வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகையும், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய சென்றார். ஊழியர்கள் அவரிடம் பாதுகாப்பு கருதி சில விபரங்களை கேட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அதில் கோயில் பெண் அலுவலர் உள்ளிட்டோர் 'எங்களிடம் ஹிந்து மதத்திற்கான சான்றிதழ் உள்ளதா' எனக் கேட்டனர். நான் ஒரு நடிகை. திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்றுள்ளேன். என் குழந்தைக்கு ஹிந்து பெயர் (கிருஷ்ணா) தான் வைத்துள்ளேன். குங்குமம் நெற்றியில் வைத்துவிட்டுத் தான் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதுவரை எந்த கோயிலிலும் என்னிடம் இதுபோன்று ஊழியர்கள் நடந்து கொண்டதில்லை. ஊழியர்களுக்கு யாரிடம் எப்படி பேசுவது எனத் தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

கோயில் ஊழியர்கள் கூறுகையில், 'முகக்கவசம் அணிந்து வருவோரிடம் பாதுகாப்பு கருதி இதுபோல் கேட்பது நடைமுறை தான். அவர் நடிகை என்பது முன்கூட்டியே தெரியாது' என்றனர்.

அரசியலாக்க வேண்டாம்: நமீதா

கோயிலில் நடந்த சம்பவம் குறித்து நமீதா, அவரது கணவர் கூறியதாவது: மதுரை இஸ்கான் கோயிலுக்கு வந்தபோது அதன் நிர்வாகிகளுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றோம். கோயில் ஊழியர்கள், அதிகாரிகள் எங்களை தடுத்து 'ஹிந்துவா, முஸ்லிமா' என கேள்வி எழுப்பி, 'நீங்கள் முஸ்லிம் எனத் தகவல் கிடைத்துள்ளது. எனவே ஹிந்து என்பதற்கான சான்றிதழ் காட்டுங்கள்' என்றனர்.
ஆதார் அட்டையை காண்பித்தபோது 'அதில் மத அடையாளம் இல்லை' எனக் கூறி அவமரியாதையாக பேசினர். 15 நிமிடங்களுக்கு மேல் வாக்குவாதம் செய்து காக்க வைத்தனர்.குங்குமத்தை நெற்றியில் வைக்க சொல்லி உள்ளே அனுமதித்தனர். நாடு முழுவதும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளோம். பிறப்பால் நாங்கள் ஹிந்து. உரிய விளக்கம் அளித்தும் ஊழியர்கள் ஏற்கவில்லை.
நான் (நமீதா) இதுவரை இங்கு 5 முறை தரிசனம் செய்துள்ளேன். இதுபோல் நடந்ததில்லை. தரிசனம் சிறப்பாக இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி. இதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை. கோயிலுக்கு வருவோரை கண்ணியத்துடன் வரவேற்க வேண்டும். தகுதியான அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றனர்.








      Dinamalar
      Follow us