sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வண்டியூரில் மண்டூக முனிவருக்கு அழகர் வழங்கிய சாப விமோசனம்

/

வண்டியூரில் மண்டூக முனிவருக்கு அழகர் வழங்கிய சாப விமோசனம்

வண்டியூரில் மண்டூக முனிவருக்கு அழகர் வழங்கிய சாப விமோசனம்

வண்டியூரில் மண்டூக முனிவருக்கு அழகர் வழங்கிய சாப விமோசனம்


ADDED : ஏப் 25, 2024 04:06 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில், : மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப விமோசனம் வழங்கிய அழகர், தசாவதார நிகழ்ச்சிக்காக ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.

அழகர் மலையிலிருந்து ஏப்., 21 அன்று தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23 காலை வைகையாற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் தங்கினார். நேற்று (ஏப்.,24) காலை 9:00 மணிக்கு சேஷவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதியம் 3:00க்கு மேல் 4: 00 மணிக்குள் கருடவாகனத்தில் வைகையாற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் எழுந்தருளிய அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பின் ராமராயர் மண்டபத்திற்கு திரும்பினார். அதிகாலை 12:00 மணிக்கு மேல் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஏப்.,25) காலை 7:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் புறப்படுவார். நாளை(ஏப்.,26) அதிகாலை 2:30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் நடைபெறும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருள்வார்.






      Dinamalar
      Follow us