தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அடிப்படை வசதிகள் கேட்டு வலியுறுத்தல்

அடிப்படை வசதிகள் கேட்டு வலியுறுத்தல்

அடிப்படை வசதிகள் கேட்டு வலியுறுத்தல்


ADDED : ஜூன் 22, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சி, வாசிநகர் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தில் பொதுச் சுகாதார வளாகம் இல்லாததால் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கும் பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

சமீபத்தில் உள்ளூர்காரர் ஒருவர் தனது தோட்டத்திற்கு வேலி அமைக்கும்போது, அந்தப் பாதையையும் சேர்த்து அமைத்துள்ளார். அதிகாரிகள் இந்தப் பகுதியை ஆய்வு செய்து பாதையை உருவாக்கித்தர வேண்டும். கிராமத்திற்கு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத்தி சப்கலெக்டர் உத்கர்ஷ்குமாரிடம் மனு கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us