ADDED : ஆக 06, 2024 05:21 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுரேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர் விஜயபாரதி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.
