ADDED : ஜூலை 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: பொதிகை ரயிலில் ஜூலை 27ம் தேதி கடையநல்லுாரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முருகனுக்கு டிக்கெட் இன்றி பயணித்ததாக டி.டி.இ., பென்னிட் அபராதம் விதித்தார்.
இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முருகனை டி.டி.இ., தாக்கினார். இவ்விவகாரத்தில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட டி.டி.இ.,யை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் நாகராஜன் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தினர் நேற்று மதுரை ரயில்வே மேற்கு நுழைவுவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
