ADDED : ஆக 03, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு நர்ஸ்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆட்குறைப்பு தொடர்பான அரசாணை எண் 204 ஐ ரத்து செய்யவும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். செவிலியர் கண்காணிப்பாளர் வஞ்சிக்கொடி, நிர்வாகிகள் பாண்டியம்மாள், பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
