/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வளர்ச்சித் துறை கணக்காளர்கள் போராட்டம் நடத்த முடிவு
/
வளர்ச்சித் துறை கணக்காளர்கள் போராட்டம் நடத்த முடிவு
வளர்ச்சித் துறை கணக்காளர்கள் போராட்டம் நடத்த முடிவு
வளர்ச்சித் துறை கணக்காளர்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஆக 12, 2024 05:12 AM

மதுரை : ஊரக வளர்ச்சித்துறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர்கள் (வி.பி.ஆர்.சி.,) ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர்கள் (பி.எல்.எப்.,) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் பணிபுரியும் வி.பி.ஆர்.சி., பி.எல்.எப்., கணக்காளர்களுக்கு (கிராம வறுமை ஒழிப்பு) அடையாள அட்டை, இன்சூரன்ஸ் திட்டம் வழங்க வேண்டும். அவர்களுக்கு தனி நிதிஒதுக்கீடு செய்து மாதச்சம்பளமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்களை நிரந்தரம் செய்து மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.
ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்களை அரசு பணியாளர்களாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் கூறியதாவது:
எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால் மீண்டும் போராட முடிவெடுத்துள்ளோம்.
ஆக.21 காலை 10:00 மணிக்கு சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை ரவுண்டானாவில் துவங்கி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முடிவடையும் வகையில் ஊர்வலம் நடத்த உள்ளோம்.
இதில் அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் மு.செ. கணேசன், அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார், தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன் உட்பட பல ஆயிரம் பேர் பங்கேற்பர் என்றார்.

