/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மார்ச் 26ல் துவங்குகிறது 'தினமலர்' வழிகாட்டி; பிளஸ் 2 வுக்குப்பின் எங்கு, என்ன படிக்கலாம் ; 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகள்
/
மதுரையில் மார்ச் 26ல் துவங்குகிறது 'தினமலர்' வழிகாட்டி; பிளஸ் 2 வுக்குப்பின் எங்கு, என்ன படிக்கலாம் ; 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகள்
மதுரையில் மார்ச் 26ல் துவங்குகிறது 'தினமலர்' வழிகாட்டி; பிளஸ் 2 வுக்குப்பின் எங்கு, என்ன படிக்கலாம் ; 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகள்
மதுரையில் மார்ச் 26ல் துவங்குகிறது 'தினமலர்' வழிகாட்டி; பிளஸ் 2 வுக்குப்பின் எங்கு, என்ன படிக்கலாம் ; 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகள்
ADDED : மார் 07, 2025 05:23 AM
மதுரை : பிளஸ் 2வுக்குப்பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, மார்ச் 26 துவங்கி 28 வரை மூன்று நாட்கள் மதுரை தமுக்கம் மைதானம் அரங்கில் கோலாகலமாக நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில் அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்கள் பயனுள்ள ஏராளமான உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்தாண்டும் மார்ச் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களும் தமுக்கம் அரங்கில் கல்வி கண்காட்சியுடன் கருத்தரங்குகளும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது.
சிறப்பு கருத்தரங்குகள்
மூன்று நாட்களிலும் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில் நீட், ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள், மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, மிஷின் லேர்னிங், கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்ன, மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளும் வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் விவரம், பிரத்யேக கல்வி நிறுவனங்கள் உட்பட ஏராளமான கல்விப் பிரிவுகள், படித்த பின் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட கல்வி அரங்குகள்
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் என 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரு கூரையின் கீழ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.
பள்ளிகளின் அரங்குகள்
வழிகாட்டி நிகழ்ச்சியில் முதன்முதலாக பிரபல பள்ளிகளின் அரங்குகளும் இடம்பெறுகின்றன. பள்ளிகளில் உள்ள வசதிகள், படிப்புகள், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலான அட்மிஷன் பற்றியெல்லாம் பெற்றோரும், மாணவரும் அறிந்து கொள்ளலாம்.
வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR Code ஸ்கேன் செய்து அல்லது 95667 77833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு RGN என்று டைப் செய்து அனுப்பவும். அனுமதி இலவசம்.
இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகின்றன.