ADDED : ஜூலை 12, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, விரிவாக்கத் திட்டங்களின் அறிமுக விழா முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது.
பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. புத்தகம் படிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மனித வாழ்வில் அதன் தாக்கம் குறித்தும் பேராசிரியை நாச்சியார் விளக்கினார். 1190 மாணவிகள், 50 பேராசிரியர்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியைகள் சுஜாதா, லட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

