sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க., ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி என்பது பொய் அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் தகவல்

/

தி.மு.க., ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி என்பது பொய் அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் தகவல்

தி.மு.க., ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி என்பது பொய் அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் தகவல்

தி.மு.க., ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி என்பது பொய் அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் தகவல்


ADDED : ஆக 05, 2024 06:09 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தி.மு.க., அரசு அமைந்த பின் எல்லா துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது, கல்வி மறுமலர்ச்சி அடைந்துள்ளது, புதுமைப்பெண் திட்டங்களால் உயர் கல்வி சேர்க்கை உயர்ந்துள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என, அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தின் உயர் கல்வி சேர்க்கைக்கு ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையால் பல்வேறு திட்டங்களை வழங்கியதே காரணம். பத்தாண்டு ஜெ., ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 7 சட்டக் கல்லுாரிகள், 21 தொழில் நுட்பக் கல்லுாரிகள், 4 பொறியியல் கல்லுாரிகள், 5 கால்நடை கல்லுாரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 248 தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டன. ஏராளமான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.

52 லட்சம் மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி, 60 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் 9.69 லட்சம் பேருக்கு 2ஜி டேட்டா வழங்கப்பட்டது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அன்றைய முதல்வர் பழனிச்சாமி கொண்டு வந்தார். இதன் மூலம் ஆண்டுதோறும் 625 பேர் பயன்பெறுகின்றனர். 2011 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் உயர் கல்வி சேர்க்கையில் தமிழகம் 25 சதவீதமாக இருந்தது. அ.தி.மு.க.,அரசின் தொலைநோக்கு திட்டம் மூலம் 2021 ஆண்டில் 51 சதவீதமாக அதிகரித்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த 3 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வு எதிர்கொள்ளாமல் 13 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இன்று உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் இல்லை. ஆனால் போதைப் பொருள் பழக்கத்தில் 9 சதவீத மாணவர்கள் அடிமையாகி உள்ளனர். இது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியுமா என்றார்.






      Dinamalar
      Follow us