ADDED : ஏப் 09, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக மதுரை சொக்கிகுளம் உழவர்சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விவசாயிகள், நுகர்வோருக்கு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து கலெக்டர் சங்கீதா விளக்கினார். 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மஞ்சள் பை இலவசமாக வழங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மாவட்ட வன அலுவலர் தருண்குமார், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர்கள் அமுதன், மெர்சி ஜெயராணி, தனலட்சுமி, ராணி, மேரி ஐரின் அக்னிட்டா, கமலாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சந்தை நிர்வாக அலுவலர் சுரேஷ், உதவி அலுவலர்கள் அசோக் மணி, பரமேஸ்வரன், ரமீலா செய்தனர்.

