ADDED : ஏப் 05, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருப்பரங்குன்றம் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை திட்டத்தில் பண்ணை பள்ளி விளாச்சேரி விவசாயி சர்புதீன் வயலில் நடத்தப்பட்டது.
நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த இம்முகாமில், விதைப்பு முதல் அறுவடை வரை 6 வகுப்புகள் நடக்கிறது.. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்வது, உயிர் உரங்களை பயன்படுத்தும் முறை பற்றி ஓய்வு அலுவலர் குணசேகரன் பேசினார்.
நாற்றங்கால் தயாரிப்பு, ஒற்றை நாற்று நடவு, பயன்படுத்தும் முறை குறித்து தொழில்நுட்ப மேலாளர் லதா விளக்கினார். ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி செய்திருந்தனர்.

