ADDED : ஜூன் 21, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜெ.ஜெ., நகரில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச 3 மாத களிமண்பாண்டங்கள் தயாரித்தல் பயிற்சி இன்று(ஜூன் 21) முதல் அளிக்கப்படுகிறது.
சி.எப்.சி., கூட்டமைப்பு, ஜெ.ஜெ.நகர், அவனியாபுரம், மதுரை- 12 என்ற பகுதியில் பயிற்சி நடைபெறும். 8ம் வகுப்பு முடித்த 18 - 35 வயதுள்ள இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.12 ஆயிரத்து 500 வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ் நகல்களை கொண்டு வரவேண்டும்.
தொடர்புக்கு: 78715 55825.