ADDED : ஆக 17, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்திற்கு வந்த ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லுாரியின் காந்திய சிந்தனை மையம் முதுகலை வரலாற்று துறை மாணவிகளை இளநிலை உதவியாளர் நித்யா பாய் வரவேற்றார்.
செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தி எனும் தலைப்பில் பொருளாளர் செந்தில்குமார், இன்றைய தேவை காந்தியம் என்ற தலைப்பில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசினர்.
மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. இணை பேராசிரியை கவிதா நன்றி கூறினார். இணைப்பேராசிரியை ஜோதிமணி, உதவி பேராசிரியைகள் சாந்தி, சுமதி கலந்து கொண்டனர்.

