/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனிதவள மேலாண்மை குறித்து குழுவிவாதம்
/
மனிதவள மேலாண்மை குறித்து குழுவிவாதம்
ADDED : ஏப் 09, 2024 12:42 AM
மதுரை : மதுரை வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மை ஆய்வுகள் துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில், 'புதிய சகாப்தத்தில் மனிதவள மேலாண்மையின் புரட்சி' என்ற தலைப்பில் குழு விவாதம் நடந்தது.
மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவர் செல்வலட்சுமி வரவேற்றார். முதல்வர் அல்லி தலைமை வகித்தார். குழு விவாதத்தில் எம்.பி.ஏ., ஆலோசகர் செல்வராஜ், 'ஆஸ்க் தி டர்ட்டில்' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பெனடிக்ட் ஞானியா, எம்.ராதாகிருஷ்ணன், வெங்கடேஷ் மகாதேவன், யாஹ்யா ரஷீத் உரையாடினர்.
இதில் 'அபெக்ஸ்' ஆய்வக நிறுவன துணைத் தலைவர் எம். ராதாகிருஷ்ணன், 'தற்போது வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மனிதவள செயல்பாடு அடையாளம் காணப்பட்டுஉள்ளது. இந்த உலகமயமான சகாப்தத்தில் பன்முகத் தன்மையுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம். இது போன்ற மென்மையான திறன்களில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
சென்னை புரோவிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி மோனிகா கலந்து கொண்டார். பேராசிரியர் சசிகலா நன்றி கூறினார்.

