sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பொதுநல வழக்கு தொடர்ந்தவரின் பின்புலம்; விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பொதுநல வழக்கு தொடர்ந்தவரின் பின்புலம்; விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுநல வழக்கு தொடர்ந்தவரின் பின்புலம்; விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுநல வழக்கு தொடர்ந்தவரின் பின்புலம்; விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜூன் 27, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ராமேஸ்வரம் கோயில் ஸ்படிக லிங்க பூஜைக்கு இலவச தரிசன வரிசை ஏற்படுத்த பொதுநல வழக்கு தொடர்ந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மனுதாரரின் பின்புலம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி எஸ்.பி.,க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

நாங்கள் பரம்பரையாக புரோகிதம் செய்து வருகிறோம். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்கம் பூஜை அதிகாலை 5:00 முதல் 5:30 மணிவரை நடைபெறுகிறது. இதற்கு தரிசன கட்டணமாக ரூ.50 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. இலவச பொது தரிசன வரிசை ஏற்படுத்தாதது பக்தர்களுக்கு மன உளைச்சலை தருகிறது. இந்நடைமுறை இயற்கை நீதிக்கு புறம்பானது. ஹிந்து தர்மத்திற்கு எதிரானது. பாகுபாடின்றி பக்தர்களை கட்டணமின்றி கடவுளை வழிபட அனுமதிக்க வேண்டும். பொது இலவச தரிசன வரிசை ஏற்படுத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: இதுபோன்ற நிவாரணம் வழங்க உத்தரவிட இயலாது. மனுதாரர் தொடர்ந்து இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து வருகிறார். அவரது பின்புலம் என்ன, அவருக்கு யாரும் பக்கபலமாக மறைமுக ஆதரவு தருகின்றனரா, எதிராக வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க தனிப்படை போலீசாரை திருச்சி எஸ்.பி., நியமிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை நாளை (ஜூன் 28) தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us