/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் நிலம் சர்வேக்கு போலீஸ் பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கோயில் நிலம் சர்வேக்கு போலீஸ் பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலம் சர்வேக்கு போலீஸ் பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிலம் சர்வேக்கு போலீஸ் பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 06, 2024 04:16 AM
மதுரை, : தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சர்வே செய்யும் அலுவலர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பந்தநல்லுார் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 913 எக்கர் நிலம் உள்ளது. இச்சொத்துக்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. பல சொத்துக்களை அடையாளம் காண முடியவில்லை. சிலர் சட்டவிரோதமாக சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.சொத்துக்களை சர்வே செய்து மீட்கக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சர்வே செய்யும் பணி 86 சதவீதம் முடிந்துள்ளது. மீதம் 14 சதவீத பணியை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதி: சர்வே பணியை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். அப்பணியில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை அலுவலர்களுக்கு திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

