sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ராமேஸ்வரம் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடத்த வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

/

ராமேஸ்வரம் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடத்த வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

ராமேஸ்வரம் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடத்த வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

ராமேஸ்வரம் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடத்த வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்


ADDED : ஜூன் 11, 2024 06:34 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 10 நாட்கள் ஆனி பிரம்மோற்ஸவம் நடத்த தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆனி மாதம் ஸ்ரீராமலிங்க பிரதிஷ்டை பிரம்மோற்ஸவம் ஆகம விதிப்படி 10 நாட்கள் நடைபெற வேண்டும். கடந்த ஆண்டுகளில் ஆனியில் 3 நாட்கள் மட்டுமே உற்ஸவம் நடந்தது. தற்போது ஜூன் 10 முதல் 12 வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஆகமம், சம்பிரதாயத்திற்கு எதிரானது.

தேவஸ்தானம் 1952 ல் வெளியிட்ட 'ராமேஸ்வரமும் புண்ணிய சேதுவும்' புத்தகத்தில் பிரம்ம உற்ஸவம் 10 நாட்கள் நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மோற்ஸவத்தை 10 நாட்கள் நடத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணைக் கமிஷனர் ஜூன் 18 ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us