sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பறக்கும் பால பணியின்போது காயம்; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பறக்கும் பால பணியின்போது காயம்; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

பறக்கும் பால பணியின்போது காயம்; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு

பறக்கும் பால பணியின்போது காயம்; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மார் 01, 2025 04:11 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை-நத்தம் ரோடு பறக்கும் பால பணியின்போது டூவீலரில் சென்றவர் மீது கட்டட கழிவுகள் விழுந்ததில் காயமடைந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ஜோதி மஸ்தான் தாக்கல் செய்த மனு:கூலித் தொழிலாளியான நான் 2022 டிச.,1 ல் டூவீலரில் நண்பருடன் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் சென்றேன். மதுரை-நத்தம் ரோடு பறக்கும் பால கட்டுமானப் பணி நடந்தது. பாலத்திலிருந்து கட்டட கழிவுகள் எங்கள் மீது விழுந்தன. நிலைதடுமாறி கீழே விழுந்தேன். காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

பால பணியின்போது விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவில்லை. கட்டுமான நிறுவனம் கவனக்குறைவாக செயல்பட்டது. இழப்பீடு கோரி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர், தமிழக நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்:பாலம் கட்டுமானப் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மனுதாரருக்கு நடந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியிருந்தால் மனுதாரருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்டதாக நிறுவன தொழிலாளர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ​விசாரணை நிலுவையில் உள்ளது.

நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

இழப்பீடு வழங்குவது குறித்து இந்த ரிட் மனு அடிப்படையில் முடிவு செய்ய இயலாது.நிறுவனத்திற்கு எதிராக நிவாரணம் கோரி மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். இம்மனு தகுதியற்றது. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us