ADDED : மே 12, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்தது.
ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சிவானந்தம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, தீயணைப்பு அலுவலர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
முன்னதாக தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.