sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'உள் இடஒதுக்கீடை மாற்ற வேண்டும்' * டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

/

'உள் இடஒதுக்கீடை மாற்ற வேண்டும்' * டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

'உள் இடஒதுக்கீடை மாற்ற வேண்டும்' * டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

'உள் இடஒதுக்கீடை மாற்ற வேண்டும்' * டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்


ADDED : ஆக 15, 2024 03:43 AM

Google News

ADDED : ஆக 15, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'பட்டியல் பிரிவில் உள் இடஒதுக்கீடை மாற்றி அமைக்க வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:, இந்திய அரசியல் சாசனம் வழங்கிய உரிமைப்படி மத்திய அரசு துறைகளில் பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கு 22.5 சதவீதம், மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2008ம் ஆண்டு தமிழகத்தில் பட்டியல் பிரிவில் உள்ள 76 சமுதாய மக்களில் அருந்ததியினர் என்ற தொகுப்பை உருவாக்கி 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அப்போதே அதன் விளைவுகள் குறித்து எச்சரித்தோம்.

மக்கள் தொகைக்கேற்ப உள் ஒதுக்கீடு வழங்கியிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் தேவேந்திரகுல வேளாளர், பழங்குடியினர் பிரிவில் உள்ள உரிமைகளை பறித்து வழங்கினர். 2009 உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகு நீதித்துறை, ஐ.ஏ.எஸ்,. ஐ.பி.எஸ்., கல்லுாரிகளில் காலியாகும் சில இடங்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கே வழங்கப்படுகிறது. எனவே அரசு இதனை மறு பரிசீலனை செய்து உள் இடஒதுக்கீடை மாற்றி அமைக்க வேண்டும்.

வி.சி.க., தலைவர் திருமாவளவன் போன்ற சுயநலவாதிகளால்தான் இட ஒதுக்கீடு என்ற பெயரில் அவலங்கள் நடந்துள்ளன.

15 ஆண்டுகளாக எம்.பி., எம்.எல்.ஏ., க்களை கொண்ட கட்சி இதுவரை இதற்காக குரல் கொடுத்துள்ளதா. பல நுாறு ஆண்டுகளாக மாஞ்சோலை எஸ்டேட்டில் பணியாற்றியவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்காக புதிய தமிழகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நானே நேரில் ஆஜராகி வாதாடி வருகிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us