/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் கனிமாற்றுத் திருவிழா ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்
/
திருநகரில் கனிமாற்றுத் திருவிழா ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்
திருநகரில் கனிமாற்றுத் திருவிழா ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்
திருநகரில் கனிமாற்றுத் திருவிழா ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதம்
ADDED : மே 25, 2024 05:37 AM

திருப்பரங்குன்றம் : மதுரை திருநகர் உச்சி கருப்பண சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்றுத் திருவிழா நடந்தது.
இக்கோயிலில் சுவாமிக்கு உருவம் கிடையாது. மாறாக நான்கரை அடி உயரத்தில் அரிவாள்களும், இருபுறமும் கல் துாண்களும் உள்ளன. அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய பித்தளை மணிகள் ஏராளமாக உள்ளன. இவற்றையே பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இங்கு வழிபட வருவோர் கோயில் வளாகத்திலேயே தேங்காய், பழங்களை சுவாமிக்கு படைத்து அங்கேயே சாப்பிட்டுச் செல்வர்.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் விபூதி, சந்தனம், குங்குமத்தை கோயில் எல்லை தாண்டுமுன்பே அழித்துவிடுவர்.
இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை கனி மாற்றுத் திருவிழா நடைபெறும்.
அதனை முன்னிட்டு நேற்று காலை திருப்பரங்குன்றத்திலுள்ள கோயில் வீட்டில் இருந்து 3000 வாழைப்பழங்கள், 500 மாம்பழங்கள், 500 பலாச் சுளைகள், மாலைகள், பூஜை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று உச்சி கருப்பண சுவாமி கோயிலில் படைத்தனர். தீபாராதனை முடிந்து கனிகள் மாற்றப்பட்டன.

