ADDED : ஜூலை 28, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை :எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் விஷ்வா, முகேஷ். இருவரும் நேற்று காலை பள்ளிக்கு செல்லும் வழியில் ரோட்டில் கிடந்த ரூ.ஆயிரத்தை எடுத்து போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்து சென்றனர்.
எஸ்.ஐ., க்கள் முருகராஜா, செல்லச்சாமி மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.
தலைமை ஆசிரியர் தனபால், உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களும் பாராட்டினர்.