நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மஹா வராஹி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது.
திருமணத் தடை விலகவும், குடும்ப ஒற்றுமை மேலோங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், அனைத்து உயிரினங்களும் சுபிட்சமாக வாழ்வது உள்ளிட்ட வேண்டுதலை முன்வைத்து ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். வராஹி மாலை, அபிராமி அந்தாதி பாடி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.