நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமைய கூட்டம் நடந்தது.
மேற்பார்வையாளர் கீதா வரவேற்றார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் சுகன்யா கல்வி வழிகாட்டுதல் நெறிமுறைகளை வாசித்தார். கவிதா சைகை மொழி மூலம் பள்ளியில் பயன்படுத்தப்படும் பொருட்களை செய்து காண்பித்தார். சிறப்பு பயிற்றுநர் இயன்முறை மருத்துவர், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பயிற்றுநர் தானியேல் தனசீலன் ஒருங்கிணைத்தார்.
ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.