ADDED : ஜூலை 24, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் மம்சாபுரத்தில் அனுமதியின்றி இயங்கிய மாவு மில்லால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலெக்டர் சங்கீதாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
நேற்று அந்த மாவு மில்லுக்கு நகராட்சி கமிஷனர் அசோக் குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் 'சீல்' வைத்தனர். அதேபோல் திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு திருக்குறள் எழுதப்பட்டது.

