ADDED : ஏப் 30, 2024 12:25 AM
மதுரை : மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் தமிழுக்கு ஈடில்லை காண் என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
செயலர் கவிஞர் இரா. ரவி தலைமை வகித்தார்.பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் இரா.வரதராசன்,துணைச் செயலர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். வனஜா நன்றி கூறினார்.
புலவர் முருகபாரதி, மாவீரபாகு, ராமபாண்டியன், அழகையா, குறளடியான், லிங்கம்மாள், அனுராதா, இதயத்துல்லா, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், சமயக்கண்ணு, அனுராதா, பொன்பாண்டி, பாலகிருஷ்ணன், முனியாண்டி, வேல்பாண்டி, ஷாஜஹான் ஆகியோர் கவிதை பாடினர்.
சிறந்த கவிதைகளுக்கு நிறுவனர் வீரபாண்டியத்தென்னவன் நினைவாக மகன் ஆதிசிவம் தென்னவன் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. இரா.வரதராசன் எழுதிய மணக்கும் மரபு மலர்கள்என்ற நுால் வெளியிட்டனர். மாதந்தோறும் இடம்தந்து உதவும் மணியம்மை பள்ளி தாளாளர்வரதராஜனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

