sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மருந்துகள் இல்லாமல் முடங்கிய மக்களை தேடி மருத்துவ திட்டம்; குமுறும் நோயாளிகள்

/

மருந்துகள் இல்லாமல் முடங்கிய மக்களை தேடி மருத்துவ திட்டம்; குமுறும் நோயாளிகள்

மருந்துகள் இல்லாமல் முடங்கிய மக்களை தேடி மருத்துவ திட்டம்; குமுறும் நோயாளிகள்

மருந்துகள் இல்லாமல் முடங்கிய மக்களை தேடி மருத்துவ திட்டம்; குமுறும் நோயாளிகள்


ADDED : ஏப் 26, 2024 12:30 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : திருவாதவூர் ஆரம்ப சுகாதார நிலைய பகுதி கிராமங்களில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்துகள் இல்லாததால் நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.

இங்கு திருவாதவூர், ஆட்டுக்குளம், பதினெட்டாங்குடி உள்ளிட்ட கிராமத்தினர் சிகிச்சை பெறுகின்றனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகம் உள்ளிட்ட 5 வகை பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர். அவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் அவரவர் வீடுகளுக்கு சென்று செவிலியர்களால் மருந்துகள் வழங்கப்படும். ஆனால் சில மாதங்களாக வழங்கவில்லை.

பயனாளிகள் கூறியதாவது: ஆட்டுக்குளம், திருவாதவூர் பகுதிகளில் இரண்டு மாதங்களாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்துகள் வழங்கவில்லை. இதில் பதிவு செய்தவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை தரக்கூடாது என்ற விதி உள்ளதாக அத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சுகாதார நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நாள் கணக்கில் காத்து கிடக்கிறோம். எனவே, மக்களை தேடி மருத்துவ திட்டம் முடங்கிவிடாமல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

சுகாதார இணை இயக்குநர் குமரகுருபரன் கூறுகையில், இந்த வாரம் முதல் மருந்துகள் வழங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us