நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் புதுமையான திட்டங்கள் குறித்த தேசிய போட்டி நடந்தது. முதல்வர் அல்லிபேசினார். டீன் பெருமாள்ராஜா வரவேற்றார். 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி முதல் பரிசு, கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் அகாடமி 2ம் பரிசு, கோவை ஜான்சன்ஸ் தொழில்நுட்பக்கல்லுாரி 3ம் பரிசு பெற்றன. துறை பேராசிரியை கவிதா நன்றி கூறினார்.

