sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுால்கள் அரங்கேற்றம்

/

நுால்கள் அரங்கேற்றம்

நுால்கள் அரங்கேற்றம்

நுால்கள் அரங்கேற்றம்


ADDED : மார் 22, 2024 04:55 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உலக கவிதை தினத்தை முன்னிட்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சி.எஸ்.ஐ., மகளிர் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் நுால் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்து பேசுகையில், ''கவிதைகள் நம் வாழ்வை வளமாக்குகிறது. கட்டுரையை விட கவிதை எழுதுவது கடினமான பணி'' என்றார். தமிழ்ச்செல்வன் 'தமிழ்ச் சிறுகதைகளின் வளமும் வனப்பும்' தலைப்பில் பேசினார்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் நரசிம்மன், மதுரைக் கல்லுாரி உதவி பேராசிரியர் காந்திமதி, கவிஞர் முத்துமாணிக்கம், முன்னாள் கணக்கு அலுவலர் பரமசிவம் எழுதிய நுால்கள் அரங்கேற்றப்பட்டன. மதுரை காமராஜர் பல்கலை விரிவுரையாளர் சரவணன், மீனாட்சி கல்லுாரி விரிவுரையாளர் நிர்மலாதேவி, பட்டிமன்ற பேச்சாளர் சுகுமாரி, ஆன்மிக சொற்பொழிவாளர் வள்ளியம்மை, இளங்கோவன் கார்மேகம் உள்ளிட்டோர் பேசினர். சங்க ஆய்வுவளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us