sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே....

/

ஒரு போன் போதுமே....

ஒரு போன் போதுமே....

ஒரு போன் போதுமே....


ADDED : ஆக 26, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 26, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துர்நாற்றத்தில் ஊருணி

மதுரை புது நத்தம் ரோட்டிலிருந்து நாகனாகுளம் செல்லும் வழியிலுள்ள ஊருணியில் கழிவுநீர் கலந்து பச்சை நிறத்திற்கு மாறியுள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. ஊருணியை துார்வாரி முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.பாலன், நாகனாகுளம்.

ரோட்டில் கழிவுநீர்

மதுரை பீ.பி.குளம் ஐந்து முனை சந்திப்பு அருகே ஓட்டல், நடைபாதை கடைகளில் சேரும் கழிவு நீரை இரவு 11:00 மணிக்கு பிறகு ரோட்டில் கொட்டுகின்றனர். இதனால் ரோடு விரைந்து சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரியா, பீ.பி.குளம்.

கழிவுநீரால் அவதி

மதுரை ரயில்வே கர்டர் பாலம் - கனகவேல்காலனி செல்லும் ராஜா மில் ரோட்டிலுள்ள தொட்டியில் குப்பை முறையாக அள்ளப்படாமல் ரோட்டில் சிதறி கிடக்கிறது. அருகில் கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜன், கனகவேல்காலனி.

9 பேரை கடித்த நாய்

மதுரை ஹார்விபட்டியில் சில நாட்களாக வெறி நாய் ரோட்டில் செல்வோரை கடித்து வருகிறது. இதுவரை 9 பேரை நாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. பெண்கள், குழந்தைகள் அச்சத்திலேயே உள்ளனர்.

-எஸ்.ஏ.ராஜசேகர், ஹார்விபட்டி.

ஆக்கிரமிப்பு அவதி

மதுரை வருமான வரித்துறை அலுவலகம் முதல் உழவர்சந்தை வரை ரோட்டோரம் வர்த்தக நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டிகளால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்டர்மீடியனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

-நித்யா, பனங்காடி.






      Dinamalar
      Follow us