நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சமூக அறிவியல் கல்லுாரியில் முதுகலை மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல், பட்டய படிப்பிற்கான தொடக்க விழா செயலாளர் தர்மசிங் தலைமையில் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி விஜயசரவணன் துவக்கி வைத்தார்.
பட்டய படிப்பு முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மீனலோஷினி நன்றி கூறினார்.