sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

/

அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை


ADDED : ஜூலை 20, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உசிலம்பட்டி சில்லாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் 62, வார்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஏற்கனவே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்ற போது கால் விரல்கள் அகற்றப்பட்டன. மேல் சிகிச்சைக்காக ஜூலை 17ல் மதுரை அரசு மருத்துவமனை 219 வது வார்டில் இவர் அனுமதிக்கப்பட்டதாக டீன் தர்மராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணி வரை செல்வத்தின் மகன் பிரபாகரன் உடனிருந்தார். மற்ற நோயாளிகள் துாங்க விளக்கை அணைத்த நேரத்தில் பிரபாகரன் துாங்கி கொண்டிருந்தார். வார்டின் அருகே உள்ள கதவில்லாத மருந்து கட்டும் அறைக்கு (டிரஸ்ஸிங் ரூம்) சென்ற செல்வம், ஜன்னலில் பெட்சீட்டை கட்டி துாக்கிட்டு இறந்தார். நர்ஸ்கள் மருந்து கட்டும் அறைக்கு சென்ற போது செல்வம் இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us