ADDED : ஆக 20, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த பிப்.,1 வரை மதுரை மாவட்டத்தில் 42 வழக்குகளில் 49 பேருக்கு ரூ. 13 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த பிப்.,21 க்கு பின்பு ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 506 குடும்பங்களுக்கும் இதேபோல கடந்த 6 மாதங்களாக பலருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்குடும்பங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. இக்குடும்பத்தினர் பலமுறை அரசுக்கு மனு கொடுத்துள்ளனர்.
எனவே வன்கொடுமையால் பாதித்த 506 குடும்பங்களுக்கான 6 மாத நிலுவைத் தொகை ரூ.4 கோடியே 9 லட்சத்து 86 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

