sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி

/

மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி

மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி

மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை அறிக்கை முடக்கப்படுகிறதா நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் என பேராசிரியர்கள் கேள்வி


ADDED : மார் 04, 2025 09:00 PM

Google News

ADDED : மார் 04, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு குறித்து பேராசிரியர் குழு விசாரணை நடத்தி 2 வாரங்களுக்கு முன் விரிவான அறிக்கை சமர்ப்பித்தும், தொடர் நடவடிக்கைகள் மறைமுகமாக முடக்கப்படுவதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்பல்கலையில் பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைத் தேர்வு 2024, செப்., 22ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களிடம் அப்பிரிவு அலுவலர்கள் சிலர் ரூ.பல லட்சம் பணம் பெற்று முறைகேடு செய்ததாக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆதாரங்களுடன் அரசு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கருக்கு புகார் அனுப்பினர். இதுகுறித்து விசாரிக்க உயர்கல்வித்துறையும் உத்தரவிட்டது.

இதன்படி, இம்முறைகேட்டை விசாரிக்க 2024 டிச.,27ல் இப்பல்கலை பயோடெக்னாலஜி புலத் தலைவர் கணேசன் தலைமையில் பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணையை முடக்கும் வகையில் பல்கலை அதிகாரிகள், அலுவலர்கள் சிலர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குழு விசாரணையில் தடை ஏற்பட்டது. அதையும் தாண்டி இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து விசாரணை நடத்திய குழு, அதன் விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு முன் பதிவாளரிடம் சமர்ப்பித்தது. ஆனால் அதன் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மறைமுகமாக கிடப்பில் போடப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்கலை அதிகாரிகள் பலருக்கு மறைமுக தொடர்பு உள்ளது. இதனால் தான் விசாரணை குழுவை முடக்கும் வகையில் பலர் 'அரசியல்' செய்து வருகின்றனர். இத்தகவல் அறிந்த உயர்கல்வி அதிகாரிகள் விசாரணை குழுவை முடுக்கி விட்டனர். இதன் பின்னணியில் தான் விசாரணையை அக்குழு விரைவுபடுத்தி முடித்துள்ளது. ஆனால் 2 வாரங்களுக்கு முன் அறிக்கை தாக்கல் செய்ததும் அதன் தொடர் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் 2 வாரங்களாக அந்த அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

விசாரணை குழு தரப்பில், 2 வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது. அதிகாரிகள் உத்தரவின்பேரில் பலரிடம் விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. தொடர்புடையவர்கள் விவரம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழு பணி அத்துடன் முடிந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது.

பல்கலை அதிகாரிகள் கூறுகையில், பேராசிரியர்கள் குழு அறிக்கை கன்வீனர் கவனத்திற்கு கொண்டு சென்று சிண்டிகேட் கூட்டத்தில் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இவ்விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிஎச்.டி.,யில் புதிய சர்ச்சை

இப்பல்கலை துணைவேந்தராக குமார் இருந்தபோது, பிஎச்.டி., படிப்புக்கு மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைகளை (தீசிஸ்) மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி வெளிநாட்டை சேர்ந்த பேராசிரியர் ஒருவரும் ஆய்வு அறிக்கைகளை கூடுதலாக மதிப்பீடு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் ஒரு பாடப்பிரிவில் 10க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் அறிக்கையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உயர்கல்வி நிறுவனம் நடத்தும் என்.ஜி.ஓ., நிர்வாகி ஒருவர் மதிப்பீடு செய்துள்ளார். அவர் பேராசிரியர் அல்ல. அதுபோல் கனடாவை சேர்ந்த ஓய்வு பேராசிரியர் மதிப்பீடு செய்துள்ளார். பேராசிரியர் அல்லாத, ஓய்வு பேராசிரியர் மதிப்பீடு செய்வது நடைமுறை இல்லை. ஆனாலும் சிலர் இவ்விதியை மீறியுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்கிடையே பலரின் ஆய்வேடுகள் பிஎச்.டி., பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக 'பென்டிங்'கில் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us