sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'புட் போர்டு' மாணவர்களை கண்டித்த ஏட்டு மீது தாக்கு

/

'புட் போர்டு' மாணவர்களை கண்டித்த ஏட்டு மீது தாக்கு

'புட் போர்டு' மாணவர்களை கண்டித்த ஏட்டு மீது தாக்கு

'புட் போர்டு' மாணவர்களை கண்டித்த ஏட்டு மீது தாக்கு


ADDED : ஆக 11, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம், கற்பக நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 44; பெருங்குடி போலீஸ் ஏட்டு. நேற்று முன்தினம் மாலை திருமங்கலத்திலிருந்து விமான நிலைய ரோடு வழியாக ஓ.ஆலங்குளத்திற்கு சென்ற டவுன் பஸ்சில், பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.

அப்போது, டூ - வீலரில் வந்த அழகர்சாமி, படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்து உள்ளே செல்லுமாறு கூறினார். மாணவர்கள் உள்ளே சென்றபின் பஸ் கிளம்பியது.

இந்நிலையில், போலீஸ்காரர் தங்களை திட்டியதாக மாணவர் ஒருவர் தன் அப்பா ராமரிடம் தெரிவித்தார்.

ஆத்திரமடைந்த ராமர், டூ - வீலரில் வந்த அழகர்சாமி மீது, தன் டூ - வீலரால் வேகமாக மோதி கீழே தள்ளி, ராமரை கொல்ல முயற்சித்தார்.

காயமடைந்த ஏட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us